Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரம் அருகே கழுநீர்குளத்தில் தென்னை டானிக் செயல்முறை விளக்கம்

பிப்ரவரி 04, 2023 06:46

பாவூர்சத்திரம் : - பாவூர்சத்திரம் அருகே கழுநீர்குளம் விவசாயிகளுக்கு தென்னை டானிக் குறித்து செயல் விளக்கம்நடத்தப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதியாண்டு மாணவிகள் கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் கிராம மக்களுக்கு தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. இது தென்னைக்கு தேவையான சத்துகளையும்,வளர்ச்சி ஊக்கிகளையும் வழங்குகின்றது. இதனைதெளிப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான தேங்காய்கள் பிடிப்பதுடன் குறும்பை உதிர்வையும் குறைக்கின்றது .

ஒரு லிட்டர் மருந்தை 4 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 மில்லி வீதம் ஒரு மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்என செயல்விளக்கம் செய்து  காண்பிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்